சந்து பொங்கல் தீர்த்தக்குட ஊர்வத்தில் இறைவன் வேடங்களில் வந்த பக்தர்கள்
Komarapalayam King 24x7 |5 Jan 2025 6:46 PM ISTசந்து பொங்கல் தீர்த்தக்குட ஊர்வத்தில் இறைவன் வேடங்களில் பக்தர்கள் வந்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரில்மார்கழி மாதத்தில் உள்ள அனைத்து பகுதியில், பொதுமக்கள் பூரண நலத்துடன் வாழவும், பிள்ளைகள் நிறைந்த கல்வி செல்வம் பெற்றிடவும், திருமணம் ஆகாத ஆண்கள், பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவும், தொழில் வளம், விவசாய வளம் செழிக்கவும் சந்து பொங்கல் விழா நடத்தபடுவது வழக்கம். சேலம் சாலை சத்தியாபுரி பகுதி சந்து பொங்கல் விழாவையொட்டி, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இதில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரத்தத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தவாறு வந்தார். மேலும் ஆண் மற்றும் பெண்கள் சிவன், மாரியம்மன், பத்ரகாளியம்மன் உள்ளிட்ட பல்வேறு இறைவன் வேடமிட்டு வந்தனர். வலி நெடுக பொதுமக்கள் இதனை வேடிக்கை பார்த்து அம்மனை வணங்கினர். பொங்கல் வைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story



