சிவகங்கையில் தேமுதிக ஆர்ப்பாட்டம்

X
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ராமச்சந் திரனார் பூங்கா அருகே தேமுதிக மாவட்டச் செயலாளர் திருவேங்கடம் தலைமையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமைச் சம்பவத்திற்கு தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட அவைத் தலைவர் அருணாகண்ணன், பொருளாளர் துரை பாஸ்கரன், துணைச் செயலாளர் ஞானமுத்து, நகரச் செயலாளர் தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 வழங்க வேண்டும். மாணவிகள், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவா ரணம் வழங்க வேண்டும். கஞ்சா, மது போதையை தையை ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
Next Story

