ராக்காச்சி புரத்தில் இளம் பெண் மாயம்

X
நத்தம் அருகே ராக்காச்சிபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகள் புவனேஸ்வரி வயது 23 இவர் பிஎஸ்சி முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்நிலையில் நேற்று காலை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றவர் வீடு திரும்பவில்லை. மேலும் பல இடங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து பெற்றோர் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் நத்தம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story

