கராத்தேவில் வெள்ளி மாணவிக்கு பாராட்டு

கராத்தேவில் வெள்ளி மாணவிக்கு பாராட்டு
தேசிய அளவிலான நடைபெற்ற கராத்தே போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவி வெள்ளி பதக்கம்
பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில், பெண்களுக்கான -56 கிலோ எடை பிரிவில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இக்கோவாஷி கராத்தே அசோசியேஷன் ஆப் இந்தியா சார்பில் பங்கேற்ற மாணவி ஓவியஸ்ரீ, 17, வெள்ளி பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற மாணவிக்கு தமிழக அரசு சார்பில், 1.50 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. பரிசு பெற்ற வீராங்கனை ஓவியஸ்ரீக்கு பாராட்டு விழா, பயிற்சி பள்ளி சார்பில், காஞ்சிபுரத்தில் நடந்தது. காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவி தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story