அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம்
பெரம்பலூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் மற்றும் திருவீதி உலா நடைபெற்றது.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெரம்பலூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்ம புரீஸ்வரர் திருக்கோயிலில் ஆருரா தரிசனத்தை யொட்டி, நட்ராஜப் பெருமானுக்கு பால், த சந்தனம், மஞ்சள், திரவியம், பழ வ. கள், திருநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து அருள்மிகு சிவகாமி சமேத பெருமானுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story



