போலீஸ் ஸ்டேஷனில் பொங்கல் விழா

X
Komarapalayam King 24x7 |16 Jan 2025 7:14 PM ISTகுமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பொங்கல் விழா இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் கொண்டாடப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன் வளாகம் முழுதும், வண்ண மலர்களாலும், கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஸ்டேஷன் வாசலில் பணம்ன கோலமிட்டு, பொங்கல் வைக்கப்பட்டது. பொங்கல் பொங்கும் போது, போலீசார் அனைவரும் பொங்கலோ, பொங்கல் என்று குலவையிட்டு கூறினர். பொதுமக்களுக்கு இனிப்புகள், பொங்கல் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டன. இதில் எஸ்.ஐ.க்கள் தங்கவேடிவேல், நடராஜ், எஸ்.எஸ்.ஐ.க்கள் மாதேஸ்வரன், குணசேகரன், ராம்குமார், வரதராஜன், பொன்னுசாமி, ஏட்டுக்கள் பார்த்திபன், செல்வி, சரவணன், தி.மு.க. முன்னாள் நகர செயலர் செல்வம், மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
