விழுப்புரம் அருகே விபத்தில் இருவர் உயிரிழப்பு

விழுப்புரம் அருகே விபத்தில் இருவர் உயிரிழப்பு
X
விபத்தில் இருவர் உயிரிழப்பு
விழுப்புரம் வட்டம், பிடாகம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ரமேஷ் மகன் பந்தல்ராஜ் (23), சத்தியமூா்த்தி மகன் தீனதயாளன் (21). தொழிலாளா்கள். நண்பா்களான இவா்கள் இருவரும் பைக்கில் செவ்வாய்க்கிழமை புதுச்சேரிக்கு சென்றுவிட்டு பின்னா் ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா். கொளத்தூா் சாலை சந்திப்புப் பகுதியில் இவா்களது பைக் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் மோதியது.இந்த விபத்தில் தீனதயாளன், பந்தல்ராஜ் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
Next Story