விஜய் பக்குவப்பட்ட அரசியலை நோக்கி செல்கிறார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் பேட்டி....
விஜய் பக்குவப்பட்ட அரசியலை நோக்கி செல்கிறார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் பேட்டி....திமுகவின் ஆணவ அரசியலை அடக்க வேண்டும் என்ற பிரதான கொள்கையோடு விஜய் கட்சி துவங்கியுள்ளது வரவேற்கத்தக்கது எனவும் பேட்டி... சிவகாசியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு இடைத்தேர்தல் நேர்மையான தேர்தலாக நடைபெறாது என்பதை கடந்த ஈரோடு, விக்கரவாண்டி தேர்தல் மூலம் அறிந்து கொண்டு தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது, திமுக ஆட்சியில் இடைத்தேர்தல் என்பது அத்துமீறிய அதிக வரம்பை மீறியதாக இருக்கும் என்பதால் அனைத்து எதிர் கட்சிகளும் ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது திமுக ஆட்சியில் அதிகார அத்துமீறல் என்பது தொடர்கதையான ஒன்றுதான், எனவே மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இன்ப நிதிக்காக ஆட்சியர் நிற்க வைக்கப்பட்ட அதிகார அத்துமீறல் என்பது புதுமை கிடையாது திமுகவை அதிமுக விஜயின் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதோடு திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் மத்தியிலும் திமுகவிற்கு எதிர்ப்பு உள்ளது 2026 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து சரியான வியூகம் அமைத்து ராஜேந்திரமான முடிவை எடுத்து அதிமுக வெற்றி பெறும் நடிகர் விஜய் அரசியலுக்கு வரும்போது இவரால் நிலைக்க முடியுமா என்ற ஐயப்பாடு இருந்தது உண்மை ஆனால் இன்று அவரது நிதானமான நடவடிக்கையை பார்க்கும் போது அரசியல் தலைவர்கள் இயங்கும் அளவிற்கு பக்குவப்பட்ட அரசியலை நோக்கி செல்கிறார் விஜய் திமுக மீது வைத்துள்ள அதிருப்தி அதிமுகவிற்கு பலமாக உள்ளது திமுகவின் ஆணவ அரசியலை அடக்க வேண்டும் என்ற பிரதான கொள்கையோடு விஜய் கட்சி துவங்கியுள்ளது வரவேற்கத்தக்கது ஒரு ரூபாய் பரிசு தொகை கூட கொடுக்காமல் மக்களை பொங்கல் கொண்டாட வைத்துள்ளது திமுக அரசு நீட் விவகாரத்தில் மக்களிடத்தில் பொய்யான வாக்குறுதியை சொன்னோம் வென்றோம் என்பதாக திமுக ஆட்சி உள்ளது என்றார்.
Next Story



