வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி
X
முதியவர் பலி
திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமத்தை சேர்ந்தவர் குமாராசாமி, 65; இவர் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியிலுள்ள சென்னை சாலையை கடக்க முயன்றபோது, சென்னை மார்க்கத்தில் இருந்து வந்த பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. அதில் படுகாயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். ஓலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story