விருத்தாசலத்தில் ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்து வாலிபர் தற்கொலை

X
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ஆனந்த குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சிபிள்ளை மகன் பாலமுருகன் (வயது 26). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 17ஆம் தேதி அன்று இரவு 8 மணிக்கு விருத்தாசலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகே மதுரையில் இருந்து டெல்லி நோக்கி சென்ற லோக் மானிக் திலக் என்ற எக்ஸ்பிரஸ் ரெயில் வரும்போது திடீரென தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப் போது அவர் மீது ரயில் ஏறி சென்றதால் அவர் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவல் கிடைத்து விரைந்து சென்ற விருத்தாசலம் ரயில்வே இருப்பு பாதை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பாலமுருகன் திருமணம் ஆகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

