விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு

X
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா, சரக ஆய்வாளர் பிரேமா ஆகியோர் முன்னிலையில், 9 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டன. இதில், அர்த்த ஜாம அடியார் குழுவினர் 50க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 8 லட்சத்து 60 ஆயிரத்து 339 ரூபாய் பணம், 5 கிராம் தங்கம், 18 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
Next Story

