கொத்தூர் பகுதியில் மாயிலார் பண்டிகையை முன்னிட்டு எருது விடும் விழா

X
திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர் கிராமத்தில் மயிலார் பண்டிகையை முன்னிட்டு மாபெரும் எருது விடும் திருவிழாவில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சிரிப்பாய்ந்து ஓடின திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தில் மியிலார் பண்டிகையை முன்னிட்டு மாபெரும் எருது விடும் திருவிழா ஊர் பெரியவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் அதி விமர்சையாக நடைபெற்றது இந்த எருது விடும் திருவிழாவில் இருநூறுக்கும் மேற்ப்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுப்பட்டனர் இந்த எருது விடும் விழாவில் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து களைகளுக்கும் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்ட பின்னரே போட்டியில் அனுமதிக்கப்பட்டது இந்த எருது விடும் திருவிழாவில் ஆந்திரா மாநிலம் பகுதியிலிருந்து குப்பம்,மல்லானூர் மற்றும் கிருஷ்ணகிரி தருமபுரி, சிங்காரபேட்டை போச்சம்பள்ளி உள்ளிட்ட மாவட்டங்கலிருந்தும் சுமார் 250-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின மேலும் குறைந்த நொடியில் இலக்கை எட்டிய காளைகளுக்கு முதல் பரிசாக 60,000 ரூபாயும் இரண்டாவது பரிசாக 50,000 ரூபாயும், மூன்றாவது பரிசாக 40,000ரூபாய் என மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது பர்கூர் பகுதியை சேர்ந்த காளை 60,000 ரூபாய் பரிசு தட்டி சென்றது இரண்டாவது பரிசு ஆந்திரா மாநிலம் மல்லானூர் பகுதியை சேர்ந்த காளை 50 ஆயிரம் பரிசை தட்டி சென்றது இந்த எருது விடும் திருவிழாவில் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு எருது விடும் திருவிழாவை கண்டு களித்தனர் இந்த நிகழ்ச்சியில் 200 கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் மற்றும் மருத்துவ துறை மற்றும் கால்நடை மருத்துவ துறை தீயணைப்பு துறை வருவாய் துறை மற்றும் கிராம நிருவாக அலுவலர் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்
Next Story

