காவலர் கண் முன்பு இளைஞர் கழுத்தறுத்து படுகொலை

குற்றவாளிகளுக்கு உடந்தையாக காவல்துறை செயல்படுவதை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், தலித் மக்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்து, கைது செய்வதை கைவிட்டு, வழக்கை வாபஸ் பெற வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவரும் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கை.களத்தூரில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூரில் காவலர் கண் முன்பு தலித் இளைஞர் மணிகண்டன் என்பவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். செல்லத்துரை, மாநில குழு உறுப்பினர் சாமி.நடராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், மணிகண்டன் படுகொலையில் தொடர்புடையை அனைவர் மீதும் மற்றும் காவலர்கள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், மணிகண்டனின் குடும்பத்திற்கு சட்டரீதியான இழப்பீடும், அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும், குற்றவாளிகளுக்கு உடந்தையாக காவல்துறை செயல்படுவதை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், தலித் மக்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்து, கைது செய்வதை கைவிட்டு, வழக்கை வாபஸ் பெற வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவரும் முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

