வேலை நிறுத்தம் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

X
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி கடந்த ஆண்டு மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. அப்போது, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திலிருந்த அரியக்குடி, இலுப்பக்குடி, சங்கராபுரம், கோவிலூா், மானகிரி ஆகிய ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. இந்நிலையில், அரியக்குடி, இலுப்பக்குடி ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இப்பணியில் ஈடுபட்டு வந்த பெண்கள் இலுப்பக்குடி- காரைக்குடி சாலையில் உள்ள கோட்டைகரை முனிஅய்யா கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காரைக்குடி டி.எஸ்.பி. பாா்த்திபன், வட்டாட்சியா் ராஜா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
Next Story

