படித்துறை அமைக்க  அடிக்கல் நாட்டு விழா   

படித்துறை அமைக்க  அடிக்கல் நாட்டு விழா   
X
குமாரபாளையம் நகராட்சி வார்டு எண்: 4 ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் படித்துறை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி வார்டு எண் 4 ல்  பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024 - 25 ன் கீழ் அங்காளம்மன் கோவில் பின்புறம் ஆற்றங்கரையில் படித்துறை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நகர மன்ற தலைவர்  வடக்கு நகர திமுக பொறுப்பாளர் விஜய் கண்ணன் தலைமை வகித்தார். இது பற்றி அப்பகுதி பெண்கள் கூறியதாவது குமாரபாளையம் அங்காளம்மன் கோவில் பின்புறம் உள்ள காவிரி படித்துறையில், படிகள் சேதமாகி, ஆற்றில் இறங்கி செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இது குறித்து நகராட்சி தலைவர் வசம் புகார் கூறியதன் பேரில், படித்துறை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. மிக்க மகிழ்ச்சி. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதில் துணை தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் புஷ்பா, மாவட்ட செயலர் மதுரா செந்தில், ஈரோடு எம்.பி. பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தனர்.
Next Story