*தை அமாவாசை  வழிபாட்டிற்கு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நான்கு நாட்கள் அனுமதி ....*

*தை அமாவாசை  வழிபாட்டிற்கு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நான்கு நாட்கள் அனுமதி ....*
X
*தை அமாவாசை  வழிபாட்டிற்கு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நான்கு நாட்கள் அனுமதி ....*
தை அமாவாசை  வழிபாட்டிற்கு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நான்கு நாட்கள் அனுமதி .... விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் படுக்கையில் 10 பக்தர்கள் வரை உயிரிழந்தனர் .இதனை அடுத்து மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை , பெளர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர் கோவிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை    முன்னிட்டு நாளை 27ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் சதுரகிரி  கோவிலுக்கு பக்தர்கள் செல்ல  கோயில் நிர்வாகம்  சார்பில் அனுமதிவழங்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 12 வரை மட்டுமே அனுமதி எனவும், கோயிலுக்கு செல்லும் வழியில்  உள்ள நீரோடைகளில் குளிக்க கூடாது எனவும், இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது,மழை பெய்தால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் எனவும்  வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story