ராஜபாளையத்தில் முன்பகை காரணமாக அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர்.*

ராஜபாளையத்தில் முன்பகை காரணமாக அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர்.*
X
ராஜபாளையத்தில் முன்பகை காரணமாக அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர்.*
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்பகை காரணமாக அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஓடாபட்டியை சேர்ந்தவர் ராம்குமார். இவர் அதே பகுதியில் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரது மனைவி சந்தன ஈஸ்வரிக்கும், இவரது பண்ணையில் வேலை பார்க்கும் நெருங்கிய உறவினரான காளிராஜ் என்பவருக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படவே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சந்தன ஈஸ்வரி கணவனை விட்டுவிட்டு தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு காளி ராஜ் உடன் சென்றுவிட்டார். காளிராஜ் மூலமாக சந்தன ஈஸ்வரிக்கு சில மாதங்களுக்கு முன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. சந்தன ஈஸ்வரிக்கும் தனக்கும் விவகாரத்து கோரி ராம்குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் சமரசம் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. தற்போது பிறந்த குழந்தையும் அழைத்துக் கொண்டு சந்தன ஈஸ்வரி முதல் கணவர் வீட்டுக்கு சென்று விட்டார். நேரில் சென்று காளிராஜ் அனைத்தும் சந்தன ஈஸ்வரி வர மறுத்ததாக தெரிகிறது இதனால் ராம்குமாருக்கும் காளிராஜிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காளிராஜ் இன்று காலை பால் பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ராம்குமாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் ராம்குமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வடக்கு காவல் துறையினர் காளிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story