மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள். முன்னதாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தின்(NNMT) மூலம் 6 பயனாளிகளுக்கு ரூ.30,00,000/- மதிப்பிலான மானியத் தொகைகளையும், முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் (CM- ARISE) திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.15,94,956/- மதிப்பிலான மானியத் தொகைகளையும், பிரதம மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் (PM AJAY) திட்டத்தின் கீழ், 7 பயனாளிகளுக்கு ரூ.3,50,000/- மதிப்பிலான மானியத்தொகைகளையும் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ.49.45 இலட்சம் மதிப்பிலான மானியத்தொகைகளையும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் 9 தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்திற்கான அடையாள அட்டைகளையும், தமிழ்நாடு அமைப்புச்சாரா ஓட்டுநர் நலவாரியத்தில் பதிவு செய்த பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ரூ.1,00,000/-மானியத்திற்கான ஆணையினையும், சிவகாசி அன்புத்தடம் அறக்கட்டளை சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.17,000/- வீதம் மொத்தம் ரூ.68,000/-மதிப்பிலான செயற்கை கால்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர்ஜெயசீலன் வழங்கினார்
Next Story



