இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மாணவர் சங்கத்தினர் ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் திரு.வி.க அரசு அறிவியல் கலைக்கல்லூரியில் 4,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு 150-க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 103 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக ஈடுபட்டுள்ளனர். திமுக தேர்தல் வாக்குறுதி படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும், அது வரை நீதிமன்ற ஆணைப்படி ரூ. 50,000 ஊதியம் வழங்க வேண்டும், பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி மாணவ,மாணவிகள் ஆயிரக்கணக்கானோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திலேயே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story