போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு

X
சிவகங்கை அரண்மனைவாசலில் நடைபெற்ற நிகழ்வில், போக்குவரத்து ஆய்வாளா் சக்தி இசக்கி, உதவி ஆய்வாளா் அழகுராணி ஆகியோா் தலைமையிலான போலீசார் ஓட்டுநா்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம், போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அப்போது, தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்தவா்களுக்கும், காா்களில் சீட் பெல்ட் அணிந்து வந்த ஓட்டுநா்களுக்கும் ரோஜா மலா் கொடுத்து போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா். மேலும் விதிகளைக் கடைப்பிடிக்காத காா் ஓட்டுநா்களுக்கும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனா். போக்குவரத்து போலீசார் கோபாலகிருஷ்ணன், நாகராமன், ஜெயலட்சுமி, சுப்புலட்சுமி ஆகியோா் கலந்து கொண்டனா்.
Next Story

