ஒலக்கூர் அருகே குளத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம்

X
திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அருகே மேல் பாதி பகுதியில் புல்லாக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் நேற்று முன் தினம் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஒலக்கூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிணமாக மிதந்தவரின் உடலை பார்வையிட்டு அக்கம் பக் கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் அவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதனிடையே அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

