மாரியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

X
கள்ளக்குறிச்சி, மந்தைவெளி முத்துமாரியம்மன் கோவிலில், தை மூன்றாம் வெள்ளிக்கிழமை முன்னிட்டு, குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை கோவிலில் நடந்த பூஜையில், மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரங்கள் நடந்தன. தொடர்ந்து, குத்து விளக்கு பூஜை செய்வது குறித்து வழிமுறைகள் மற்றும் நன்மைகள் குறித்து அர்ச்சகர் கேசவன் விளக்கனார். இதில் 108 பெண்கள் பூஜை செய்தனர்.
Next Story

