தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக் குழு கூட்டம்

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக் குழு கூட்டம்
X
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.
அரியலூர், பிப்.2- அரியலூர் பெருமாள் கோயில் தெருவிலுள்ள கூட்டரங்கில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி  பொதுக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அச்சங்க மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சங்க நிர்வாகிகள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர்.  மாநிலத் துணைத் தலைவரும், மாவட்டச் செயலருமான எழில் பங்கேற்று, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி பேசினார். கூட்ட முடிவில் நிர்வாகி தங்க.சிவமூர்த்தி நன்றி கூறினார்.
Next Story