புஞ்சைபுளியம்பட்டி அய்யப்பன் கோவிலில் ஆண்டு விழா

புஞ்சைபுளியம்பட்டி அய்யப்பன் கோவிலில் ஆண்டு விழா
X
புஞ்சைபுளியம்பட்டி அய்யப்பன் கோவிலில் ஆண்டு விழா
புஞ்சைபுளியம்பட்டி அய்யப்பன் கோவிலில் ஆண்டு விழா ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி முத்து விநாயகர் கோவிலில் அமைந்துள்ள பச்சபுள்ள பவளபுள்ள பால சாஸ்தா அய்யப்பன் சன்னதியில் 13-வது ஆண்டு விழா நேற்று நடந்தது. காலை 6 மணி அளவில் கணபதி யாக பூஜை நடைபெற்றது. பின்னர் கலச பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து அய்யப்ப சாமிக்கு அபிஷேகத்துடன் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் திர ளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பச்சபுள்ள பவளபுள்ள அய்யப்ப பக்தர்கள் என்ற பஜனை குழுவினர் சார்பில் பஜனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
Next Story