ராமநாதபுரம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

X

சேதுபதி மன்னர்களின் குலதெய்வம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோயில் 20 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது
ராமநாதபுரம் சேதுபதி மன்னர்க்களின் அரண்மனையில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் மிகவும் பிரசித்தி பெற்றது மன்னர்கள் வழிபாடு செய்த ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கதாகும் கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்பு ஆலயம் புனரமைக்கப்பட்டு ஆலயத்தின் கும்பாபிஷேகம் விழா கடந்த ஒன்றாம் தேதி முதல் யாகசாலை பூஜை வேத விற்பனர்கள் வேத மந்திரம் முழங்க யாகசாலை தொடங்கப்பட்டது வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க கோயிலின் தங்க கும்பத்தில் புனித நீரானது ஊற்றப்பட்டது இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் சேதுபதி ராணி ராஜராஜேஸ்வரி, ராணி அபர்ணா தேவி , ராணி அஸ்மிதா இராமநாதபுரம் மன்னர் நாகேந்திர சேதுபதி ஆகியோர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திவான் பழனிவேல் பாண்டியன் செய்திருந்தார் மற்றும் அரண்மனை சேர்ந்த சொந்த பந்தங்களும் ஆன்மீகப் பெரியோர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் 20 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவை காணும் ஏராளமான பொதுமக்கள் அரண்மனைக்கு வந்து ராஜேஸ்வரி அம்மன் அருள் பெற்று சென்றனர்
Next Story