ஸ்ரீபெரும்புதூரில் சூதாட்டத்தில் தகராறு வாலிபருக்கு வெட்டு

ஸ்ரீபெரும்புதூரில்  சூதாட்டத்தில் தகராறு வாலிபருக்கு வெட்டு
X
ஸ்ரீபெரும்புதூரில் சூதாட்டத்தில் தகராறு வாலிபருக்கு வெட்டு போலீசார் விசாரணை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே போந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் நரேஷ், 30. கட்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அருண், 28. இருவர் மீதும் ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு, தெரேசாபுரம் டாஸ்மாக் அருகே இருவரும் மது அருந்திவிட்டு, நண்பர்களுடன் சூதாட்டம் விளையாடினர். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அருண், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நரேஷின் தலை மற்றும் கையில் சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் நரேஷ் அங்கேயே சரிந்து விழுந்தார். இதையடுத்து, அருண் அங்கிருந்து தப்பினார். அக்கம்பக்கத்தினர் நரேஷை மீட்டு, போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்படி, ஒரகடம் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக உள்ள நரேஷை தேடி வருகின்றனர்.
Next Story