கடவூர் அருகே சட்டவிரோதமாக சாலையில் மது விற்ற நபர் கைது

X

கடவூர் அருகே சட்டவிரோதமாக சாலையில் மது விற்ற நபர் கைது
கடவூர்: சட்டவிரோதமாக சாலையில் மது விற்ற நபர் கைது கடவூர் தாலுகா, செம்பியநத்தம் அடுத்த மம்பத்தையூரை சேர்ந்தவர் ரவி (47). இவர் அப்பகுதியில் உள்ள பிரிவு சாலையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற சிந்தாமணிப்பட்டி போலீசார் மது விற்ற ரவி மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 27 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
Next Story