உத்திரமேரூரில் பிளாஸ்டிக் தவிர்க்க விழிப்புணர்வு

X

உத்திரமேரூர் தாமரை குளம் பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, பேரூராட்சி தலைவர் சசிகுமார் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தொடர்ந்து, பேரூராட்சியில் உள்ள பாலசுப்பிரமணியர் கோவில், சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் தாமரை குளம் பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.
Next Story