மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி

X

விபத்து
ஒரத்தநாடு அருகே உள்ள காவாரப்பட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் அறிவுச்செல்வம்(48). இவர் இப்பகுதியில் எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை கீழ வண்ணிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு வீட்டில் மின்சாரம் பழுதானதால் அதை சரி செய்ய சென்றவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இத்தகவலறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறிவு செல்வத்தின் பிரேதத்தை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனு மதித்தனர். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story