மாநில ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்டம் சார்பில்

X
நாகை மாவட்டம் திருமருகல் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்டம் சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சிக்கு, உதவி திட்ட அலுவலர் இந்திராணி தலைமை வகித்தார். வட்டார இயக்க மேலாளர் அறிவுநிதி முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி கலந்துக் கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைக்கான பாதுகாப்பு சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம், பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை, பாதுகாத்தல், தடுத்தல், குறைதீர் பாதுகாப்பு சட்டம், போக்ஸோ சட்டம், குடும்ப வன்முறை தடைச் சட்டம், குழந்தைகள் திருமண தடைச் சட்டம், பெண்கள் மீதான வன்முறைகள் சம்பந்தப்பட்ட இந்திய தண்டனை சட்டம், மாற்றுத்திறனாளிகள் நல உரிமைகள் சட்டம் பற்றி, சமுதாய வளப்பயிற்றுநர்கள், கூடுகை மற்றும் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு, வட்டார அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள், பிற துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. முடிவில், வட்டார ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா நன்றி கூறினார்.
Next Story

