போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல முயன்றவர் கைது

போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல முயன்றவர் கைது
X
திருச்சி விமான நிலைய போலீசார் வடக்கு பதிவு செய்து விசாரணை
திருச்சி விமான நிலையத்திலிருந்து மஸ்கட்டிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பி ரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பய ணம் செய்ய இருந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மதுரை மாவட்டம் மேலூர் தேத்தம்பட்டியைச் சேர்ந்த பழனி குமார் (வயது 46) என்பவர் போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு செல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அவரை பிடித்து விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்த னர்.
Next Story