கார் மோதிய விபத்தில் மயிலம் அருகே முதியவர் இறப்பு

X
விழுப்புரம் மாவட்டம்,மயிலம் அருகே உள்ள சின்னநெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்செழியன் (வயது 40). இவர் தனது மோட்டார் சைக்கிளில் அதேகிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (72) என்பவரை அழைத்து சென்று கொண்டிருந்தார்.அப்போது,சின்ன நெற்குணம் பஸ்நிறுத்தம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதியது.காயமடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக முன்டியம்பாக்கம் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.அங்கு ஏழுமலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

