சாத்தமங்கலம் மகாமாரியம்மனுக்கு புதன்கிழமை பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்.

X
அரியலூர், பிப்.7 - அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த பாலகுட விழாவில், பக்தர்கள் அனைவரும் கிராமத்தில் உள் நல்லதண்ணீர் குளத்திலிருந்து பால்குடம், அலகு காவடி எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே சென்று கோயிலை அடைந்தனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. :
Next Story

