நூதமான முறையில் கொள்ளையடித்த திருடனை பிடித்த காவல்துறையினர் அவனிடமிருந்த தங்க நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.*

நூதமான முறையில் கொள்ளையடித்த திருடனை பிடித்த காவல்துறையினர் அவனிடமிருந்த தங்க நகைகளை பறிமுதல் செய்து  சிறையில் அடைத்தனர்.*
X
நூதமான முறையில் கொள்ளையடித்த திருடனை பிடித்த காவல்துறையினர் அவனிடமிருந்த தங்க நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.*
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் தெருவில் தனியாக வசித்து வந்த மூதாட்டியின் வீடு புகுந்து நூதன முறையில் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் நூதமான முறையில் கொள்ளையடித்த திருடனை பிடித்த காவல்துறையினர் அவனிடமிருந்த தங்க நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே மக்கள் அடர்த்தியாக வசித்து வரும் கூரை பிள்ளையார் கோவில் தெரு உள்ளது. இப்பகுதியில் வயது முதிர்ந்த ராமசாமி , காளியம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர் இவர்களுக்கு இரண்டு ஆண் இரண்டு பெண் என நான்கு குழந்தைகள் உள்ளனர். நான்கு பேருக்கும் திருமணம் ஆகி அவரவர் குடும்பத்தினருடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை ராமசாமி உடல்நிலை சரியில்லாமல் வயது மூப்பு காரணமாக உயிரிழக்கவே அவரது மனைவி 85 வயதான தாய் காசியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது தேவைகளை நான்கு பிள்ளைகளும் அவ்வப்போது பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ தினமான கடந்த ஐந்தாம் தேதி மதியம் வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து தன்னை ஒரு பிசியோதெரபிஸ்ட் என அறிமுகப்படுத்திக் கொண்டு மூதாட்டி காசியம்மாளிடம் நன்கு பேசி பின்னர் பிசியோ பயிற்சி அளிக்க வேண்டும் எனக் கூறி மூதாட்டி அணிந்திருந்த மூன்று செயின்இரண்டு மோதிரம் நான்கு தங்க வளையல் 2 கம்மல் என சுமார் 15 பவுன் தங்க நகையை நூதன முறையில் திருடி விட்டு தப்பி சென்றுள்ளார். பின்னர் சுதாரித்துக் கொண்ட மூதாட்டி காசியம்மாள் நகை திருடு போனது குறித்து அவர்களது பிள்ளைகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். வீட்டிற்கு விரைந்து வந்த பிள்ளைகள் நகை திருட்டு குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் பிரீத்தி தலைமையிலான காவல்துறையினர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கள் காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகளில் தங்க நகைகளை கொள்ளை அடித்த திருடன் நகைகளை திருடிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வது பதிவாகி இருந்த நிலையில் அவனது அங்கு அடையாளம் மற்றும் அவன் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைவைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருடன் பயன்படுத்திய வாகனத்தின் பதிவு எண்கொண்ட இரு சக்கர வாகனத்திற்கு ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் அபராதம் விதிக்கப்பட்டது தெரியவந்த நிலையில் . திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவன் ராஜபாளையத்தைச் சார்ந்தவன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து விசாரணையை தீவிர படுத்திய காவல்துறையினர் ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவில் வசித்து வரும் ரகுராமன் வயது 45 என்பவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிலையில் அவனது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அவனிடமிருந்த நான்கு வளையல்கள் இரண்டு மோதிரம் இரண்டு கம்மல் மூன்று செயின் ஆகியவற்றை பறிமுதல் செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ரகுராமை கைது செய்து சிறையில் அடைத்தனர். காவல்துறையின் கிடுக்குப்பிடி விசாரணையில் எட்டாம் வகுப்பு படித்த ரகுராமன் பிசியோதெரபிஸ்ட் எனக்கூறி நூதன முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
Next Story