மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட்டை கண்டித்து நகல் இருப்பு போராட்டத்தில் ஈடுபடும் முற்பட்டனர்.

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட்டை கண்டித்து நகல் இருப்பு போராட்டத்தில் ஈடுபடும் முற்பட்டனர். காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட்டில் தமிழக அரசுக்கும் சாமானிய மக்களுக்கும் எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை என கூறி மத்திய அரசு பட்ஜெட்டை கண்டித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லிங்கம் தலைமையில் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மத்திய அரசை கண்டித்து கோஷம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென கையில் வைத்திருந்த பட்ஜெட் நகலை எரிக்க முற்பட்டனர். அது சமயம் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று பட்ஜெட் நகலை எரிக்க விடாமல் போராட்டக்காரர்களிடம் இருந்து போராடி பட்ஜெட் நகலை மீட்டனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் திடீரென போராட்டக்காரர்களுடன் போலீசார் தள்ளுமுள்ளு ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு நகல் அரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story

