பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் பொருளாதார தற்சார்பை வழங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பேச்சு

பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் பொருளாதார தற்சார்பை வழங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பேச்சு
பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் பொருளாதார தற்சார்பை வழங்கியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - காரியாபட்டியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், இலவச வீட்டு மனை பட்டா, புதிய குடும்ப அட்டைகள், உழவர் பாதுகாப்பு அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, ஆதிதிராவிட நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்மை துறை மூலமாக மொத்தம் 603 பயனாளிகளுக்கு ரூ 1,05,22,627 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த நான்கு ஆண்டு காலமாக திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஒரு மகத்தான ஆட்சியை வழங்கி கொண்டிருக்கிறது. கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் தன்னிறைவு வழங்கக்கூடிய திட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கி உள்ளது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகளிர்க்காக விடியல் பயணம் திட்டத்தை கொண்டு வந்தார் இதனால் வியாபாரம் செய்யும் பெண்களில் பயணச் செலவு மிச்சமாகி அதை மருத்துவ செலவுக்கோ பிற செலவுகளுக்கோ பயன்படுத்த முடியும். பெண் குழந்தைகளுக்கு புதுமை பெண் திட்டமும் ஆண் குழந்தைகளுக்கு தமிழ் புதல்வன் திட்டமும் கொண்டு வந்துள்ளார். பெண்கள் தலை நிமிர்ந்து நிற்க வேண்டுமென்றால் அவர்களுடைய பொருளாதார தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் பொருளாதார தற்சார்பை வழங்கியவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின். காரியாபட்டி பேரூராட்சிக்கும் மல்லாங்கிணறு பேரூராட்சிக்கும் ரூ 76 கோடி மதிப்பில் மிகப்பெரிய குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் ‌ கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.‌ வைகையில் இருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் குழாய்கள் கொண்டு வந்து சுமார் 45 ஆயிரம் பேர் பயன் அடையும் வகையில் கொண்டு வந்து இருக்கிறார்கள் அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் இந்த இரண்டு பேரூராட்சிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.‌ அதேபோல நிலையூர் - கம்பிக்குடி குமார் 18 கிலோமீட்டர் தூரம் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு ரூ 10 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் வைகையில் இருந்து குடிநீர் சிவகங்கை செல்லாமல் விருதுநகர் மாவட்டத்திற்கு வந்தடையும் வாய்ப்பு உள்ளது என பேசினார்.
Next Story