சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றியை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் விருதுநகர் பாஜக கிழக்கு மாவட்டத்தினர் கொண்டாடினர்*

X
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றியை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் விருதுநகர் பாஜக கிழக்கு மாவட்டத்தினர் கொண்டாடினர் டெல்லியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு என்னும் பணி இன்று காலை துவங்கியது தொடக்கத்தில் இருந்து தற்போதைய ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை விட பாஜக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வரான அரவிந்த் கஜ்ரிவால் பாஜக வேட்பாளரிடம் தோல்வியை தழுவியுள்ளார். இந்த நிலையில் டெல்லியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி ஆகி உள்ள நிலையில் இந்த வெற்றியை தமிழக முழுவதும் பாஜகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடிய நிலையில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் பாஜகவின் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜக கிழக்கு மாவட்டம் சார்பில் நகரத் தலைவர் மணிராஜ் தலைமையில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பாஜகவின் வெற்றியை கொண்டாடினர்.
Next Story

