புதியதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் நூலகத்தை திறந்து வைத்த வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

புதியதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் நூலகத்தை திறந்து வைத்த வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்
X
புதியதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் நூலகத்தை திறந்து வைத்த வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், 38 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள புதிய தார் சாலைக்கும் அடிக்கல் நாட்டினார்.*
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் நூலகத்தை திறந்து வைத்த வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், 38 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள புதிய தார் சாலைக்கும் அடிக்கல் நாட்டினார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரமானது, மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதனால் நாள் முழுவதும் போக்குவரத்து அதிகமாக காணப்படும். பள்ளி நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், நெல்லை சாலையையும், தென்காசி சாலையையும் இணைக்கும் வகையில் புதிய இணைப்பு சாலை திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ. 38.34 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தில், 2.10 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய தார் சாலை அமைப்பதற்கு இன்று பகலில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், தென்காசி எம்பி ராணிஶ்ரீகுமார், எம்எல்ஏ தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அரசு பணிபுரியும் மகளிர் விடுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் சிறுவர் நூலகத்தை அமைச்சர் மற்றும் ஆட்சியர் முன்னிலையில் சிறுவர்கள் திறந்து வைத்தனர். பின்னர் சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் குத்துவிளக்கு ஏற்றினர். தொடக்கத்தில் நூலகத்தில் மாணவர்கள் புத்தகங்களில் வண்ணம் தீட்டி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். பாதாள சாக்கடை திட்டத்திற்கான வைப்பு நிதி அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பொது மக்களை சிரமப்படுத்தாமல் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். என தெரிவித்தார்.
Next Story