ஆயுதப்படையில் காவலரிடம் உரிமம் பெறாத துப்பாக்கியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

ஆயுதப்படையில் காவலரிடம் உரிமம் பெறாத துப்பாக்கியை  பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
X
ஆயுதப்படையில் காவலரிடம் உரிமம் பெறாத துப்பாக்கியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
விருதுநகர் ஆயுதப்படையில் காவலரிடம் உரிமம் பெறாத துப்பாக்கியை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்... துப்பாக்கி முனையில் ஆயுதப்படை காவலர் கொல்லையில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை... விருதுநகர் அருகே பூசாரிப்பட்டி உள்ள கண்மாய் பகுதியில் வெளியூரைச் சேர்ந்த இருவர் , மது அருந்தியுள்ளனர். அவர்களை கண்டு சந்தேகமடைந்த அக்கிரமத்தை சேர்ந்த சிலர் வச்சகாரப்பட்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார், அங்கு சென்ற போது, போலீசாரைக் கண்டவுடன் ஒருவர் தப்பி ஓடியுள்ளார். சிக்கிய ஒருவரை வச்சகாரப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டியை சேர்ந்த தனுஷ்கோடி (33) என்பதும் இவர், விருதுநகர் ஆயுதப்படையில் (2013 ஆம் ஆண்டு முதல்) காவலராக பணி புரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவருடைய இரு சக்கர வாகனத்தை சோதனையிட்ட போது, உரிமம் பெறாத கைத்துப்பாக்கி (பிஸ்டல்) இருப்பதும், அதில் 6 குண்டுகள் இருக்க வேண்டிய நிலையில், 5 குண்டுகள் மட்டும் இருப்பதைகண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த துப்பாக்கியை, அவர் யாரிடம் வாங்கினார்? ஒரு குண்டை எதற்காக பயன்படுத்தினார் என்பது குறித்து போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பிச் சென்ற நபரிடம் 37 சவரன் தங்க நகைகள் இருந்தாக கூறப்படும் நிலையில் தப்பிச்சென்ற நபருடன் சேர்ந்து ஆயுதப்படை காவலர் தனுஷ்கோடி துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். சில மாதங்களுக்கு முன் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் காவலர் தனுஷ்கோடி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story