நாகை நீலாயதாட்சியம்மன் கோவில்
சப்தவிடங்க தலங்களில் ஒன்றாக நாகையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காயரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு பெருவிழா கடந்த 3,ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதற்காக 9 புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரானது, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது. நேற்று காலை காலை 6-ம் கால யாக சாலை பூஜைகள் மற்றும் பூர்ணாகுதி தீபாரதனை முடிவுற்றதை தொடர்ந்து, கடம் புறப்பாடு நடைபெற்றது. அப்போது, சிவ வாத்தியங்கள் முழங்க, கடமானது கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டது. அதனை தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் காயரோகண சுவாமி, நீலாயதாட்சி அம்மன் கோவிலின் ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தானத்திற்கு புனித நீர் ஊற்றி அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். அதனை தொடர்ந்து, பக்தர்களின் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர், சிவன் மற்றும் அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது .12, ஆண்டுகளுக்குப்பின் நீலாயதாட்சி அம்மன் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் சிவனடியார்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story






