விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை
X
தாராபுரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
தாராபுரம் அருகே உள்ள நாரணாபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி அன்னபூரணி (வயது 57). இவர் வீட்டில் வைத்திருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அன்னபூரணி உயிரிழந்தார். இது குறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயசாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
Next Story