கள்ளத் துப்பாக்கி வைத்திருந்த ஆயுதப்படை காவலர் சிறையில் அடைப்பு மேலும் ஒருவர் கைது

X
விருதுநகர் ஆயுதப்படையில் பணி புரியும் காவலரிடம் உரிமம் பெறாத துப்பாக்கியை வச்சகாரபட்டி போலீஸார் பறிமுதல் செய்த இலையில் அவரை சிறையில் அடைத்தனர் மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய மேலும் ஒருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை. விருதுநகர் அருகே பூசாரி பட்டி பகுதியில் உள்ள கண்மாய் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாம் தேதி வெளியூரைச் சார்ந்த இருவர் , மது அருந்தி உள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ஊர் மக்கள் வச்சகாரப்பட்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார், அங்கு சென்றனர். போலீசாரைக் கண்ட உடன் ஒருவர் தப்பி ஓடி விட்டனர். சிக்கிய ஒருவரை வச்சகாரப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே, கூமாபட்டி பகுதியைச் சேர்ந்த தனுஷ்கோடி (33) என்பது தெரிந்தது. இவர், விருதுநகர் ஆயுதப்படையில் (2013 ஆம் ஆண்டு முதல்) காவலராக பணி புரிந்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து அவருடைய இரு சக்கர வாகனத்தை சோதனையிட்ட போது, உரிமம் பெறாத கைத்துப்பாக்கி (பிஸ்டல்) இருப்பதும், அதில் 6 குண்டுகள் இருக்க வேண்டிய நிலையில், 5 குண்டுகள் மட்டும் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். இந்த துப்பாக்கியை, அவர் யாரிடம் வாங்கினார்? ஒரு குண்டை எதற்காக பயன்படுத்தினார் என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் விசாரணை நடத்தினார் இதை அடுத்து ஆயுதப்படை காவலர் தனுஷ்கோடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு வரும் 24ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு இருக்கிறது அடுத்து நேற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தலைமறைவான மற்றொரு நபரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் அவர் பழனியைச் சார்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது அவரை காவல்துறையினர் கைது செய்து தற்போது விருதுநகர் மாவட்டம் அழைத்து வந்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
Next Story

