சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு
நாகையை அடுத்த சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் கோயில் மிகவும் புகழ்பெற்றதாகும். சிக்கலில் வேல்வாங்கி திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்தார் முருகன் என்று வரலாறு கூறுகிறது. புகழ்பெற்ற இக்கோயிலில், தை பூசம் விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக, முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் திருநடனக்காட்சியுடன் எழுந்தருளி வீதியுலா வந்தார். அதனை தொடர்ந்து, ஷீர புஷ்கரணி என்றழைக்கக்கூடிய, பால்குளத்தில் தெப்போற்சவம் நடைபெற்றது. இதில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட, பனை ஓலைகளால் செய்யப்பட்ட தெப்பத்தில், முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து, வண்ணமிகு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story




