நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு
X
இன்று இயக்க இருந்த பயணிகள் கப்பல் ரத்து
நாகை துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இந்தாண்டுக்கான கப்பல் போக்குவரத்து இன்று (புதன்) தொடங்கும் என "சிவகங்கை" என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பலை இயக்கும் தனியார் நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சனை காரணமாக இன்று இயக்கப்படவிருந்த கப்பல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கப்பல் இயக்கம் தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, தனியார் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், இலங்கை மற்றும் தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Next Story