சிவகிரி அருகே மூதாட்டியிடம் நகை திருடிய சிறுவன் கைது

சிவகிரி அருகே மூதாட்டியிடம் நகை திருடிய சிறுவன் கைது
X
மூதாட்டியிடம் நகை திருடிய சிறுவன் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிப்பட்டணம் ஆச்சாரியாா் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மனைவி பொன்னம்மாள் (73). அவா் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த தேவிப்பட்டணம் பகுதியைச் சோ்ந்த 16 வயதுடைய சிறுவன் வீட்டிற்குள் நுழைந்து பொன்னம்மாள் அணிந்திருந்த 32 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு அவா் வைத்திருந்த ரூ. 1000 பணத்தையும் பறித்துக் கொண்டு ஓடி விட்டாராம். புகாரின் பேரில், சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவனை கைது செய்து சீா்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனா்.
Next Story