நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் இருசக்கர வாகனம் மற்றும் மகேந்திரா தோஸ்த் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழப்பு....

X
விருதுநகர் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் இருசக்கர வாகனம் மற்றும் மகேந்திரா தோஸ்த் வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழப்பு.... விருதுநகர் அருகே அக்ரஹாரப்பட்டி பாலம் அருகில் சாத்தூர் அருகே உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து சிமெண்டு மூடை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது அப்போது திடீரென லாரி பழுதாகி பாலத்தின் மீது நின்று கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பின்னால் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் மகேந்திரா தோஸ்த் வாகனமும் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. மேலும் பாலத்தின் மீது பழுதாகி நின்ற லாரியின் பின்னால் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் விருதுநகருக்கு சென்று கொண்டிருந்த விருதுநகரை சேர்ந்த செல்வம் மற்றும் வினோத் ஆகிய இருவரும் சென்ற இருசக்கர வாகனம் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற செல்வம், மற்றும் வினோத், ஆகிய இருவரும் லாரியின் பின்னால் சிக்கி இரு சக்கரவாகனம் சுக்கு நூறாக நொறுங்கி சம்பவ இடத்தில் உடல் நசங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தை தொடர்ந்து, பின்னால் மகேந்திராதேஸ்த் வாகனம் கோவில்பட்டியில் இருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த போது பழுதாகி நின்ற சிமெண்ட் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோவில்பட்டியை சேர்ந்த பழக்கடை வியாபாரி வேல்முருகன் என்பவர் மகேந்திரா தோஸ்தில் வாகனத்தில் மொத்த கொள்முதல் செய்வதற்காக சென்று கொண்டிரு ருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மகேந்திரா தோர்ஸ் வாகனத்தில் சென்ற கோவில்பட்டி பழக்கடை வியாபாரி வேல்முருகன் என்பவர் சம்பவ இடத்திலேயே மகேந்திரா தோஸ்த் வாகனத்தில் சிக்கிக் கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் உயிரிழந்த மூன்று நபர்களின் உடல்களை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் தோஸ்த் வாகனத்தை ஓட்டிச் சென்ற டிரைவர் ரமேஷ் கார்த்திக் (28) என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு விபத்துகளில் சம்பவ இடத்தில் மூன்று பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவ்விபத்தினால் மதுரை - கன்னியாகுமரி சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story

