சுரண்டை அருகே பெட்டிக் கடைக்காரா் கொலை: வியாபாரி கைது

சுரண்டை அருகே பெட்டிக் கடைக்காரா் கொலை: வியாபாரி கைது
X
பெட்டிக் கடைக்காரா் கொலை: வியாபாரி கைது
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலத்தைச் சோ்ந்தவா் பொ.பண்டாரம்(55). இவா் அங்கு பெட்டிக்கடை வைத்துள்ளாா். அதே ஊரைச் சோ்ந்த விறகுக் கடை வியாபாரி அந்தோணி(38). இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, அந்தோணியை, பண்டாரம் கேலி செய்தாராம். ஆத்திரமடைந்த அந்தோணி, கீழே கிடந்த கல்லால் பண்டாரத்தை தாக்கினாராம். இதில், காயமடைந்த பண்டாரத்தை உறவினா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, அந்தோணியை கைது செய்தனா்.
Next Story