சாலையில் கால்நடைகள் உலா செரப்பனஞ்சேரியில் அபாயம்

சாலையில் கால்நடைகள் உலா செரப்பனஞ்சேரியில் அபாயம்
X
நெடுஞ்சாலையில் விபத்திற்கு வழிவகுக்கும் வகையில் திரியும் மாட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை, பாலுார் -- காஞ்சிபுரம் உள்ளிட்ட சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை உள்ளது.இச்சாலை வழியாக ஒரடகம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. எப்போதும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், காரணித்தாங்கல், செரப்பனஞ்சேரி, பனப்பாக்கம், வஞ்சுவாஞ்சேரி, ஆரம்பாக்கம், சாலமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் மாடுகள் வளர்ப்போர், கொட்கையில் வைத்து பராமரிக்காமல், சாலையில் விடுகின்றனர்.அவை, கூட்டம் கூட்டமாக சாலையில் வலம் வருவதோடு, சாலை நடுவே படுத்து ஓய்வெடுக்கிறது. மேலும், அவை திடீரென சாலையின் குறுக்கும் நெடுக்கமாக செல்வதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள், திடீரென சாலையின் குறுக்கே வரும் மாட்டின் மீது மோதி, கீழே விழுந்து காயமடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே, நெடுஞ்சாலையில் விபத்திற்கு வழிவகுக்கும் வகையில் திரியும் மாட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, குன்றத்துார் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
Next Story