ஸ்ரீபெரும்புதூரில் ‛லிப்ட்' கேட்டு சென்ற முதியவர் உயிரிழப்பு

X
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே சுங்குவார்சத்திரத்தை அடுத்த பாப்பாங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன், 72. நேற்று காலை அதே கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி, 45, என்பவரின், 'ஆக்டிவா' ஸ்கூட்டரில் லிப்ட் கேட்டு சென்றார்.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சந்தவேலுார் அருகே வந்த போது, பின்னால் வந்த லாரி மோதியது. இதில், சந்திரன் உயிரிழந்தார். மாசிலாமணி படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மாசிலாமணியை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story

