வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சியர் சதீஸ், நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். கேத்துரெட்டிப்பட்டி ஊராட்சயில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சவுல்கொட்டாய் ரயில்வே பாலம் முதல் வேப்பிலைப்பட்டி இடுகாடு வரை 10.94 லட்சம் மதிப்பீட்டில், புதிய கால்வாய் அமைக்கப்பட்டு வரும் பணி, இதே ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணை 9.48 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் சதீஸ், விதிமுறைகள் மற்றும் வழிகாட்டிநெறிமுறைகளின்படி உரிய அளவீடுகளை குறித்து காட்டி, ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குடி நீர் வழங்க வேண்டும், தெரு விளக்கு வசதி, கழிப்பிட வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படைதேவை களை பொதுமக்களுக்கு உடனுக்குடன் நிறைவேற்றித் தர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், கலைச்செல்வி, உதவி பொறியாளர் சாந்தி. ஒன்றிய பணிதல மேற்பார்வையாளர் அன்னபூரணி உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story